Home Archive by category

பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு  ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம்.

எங்கள் ஊர் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். அதிக வீடுகள் உள்ள குறுகலான பகுதி இது. அதனால் மக்களை கூட்டம் கூட்டமாக வெளியேற்றிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்துள்ளதுடன், விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

Related Posts