Home Archive by category

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்

உத்தரபிரதேசத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கா பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகுதிக்கு 30க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு, நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் 13 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான காரணம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts