Home Archive by category

எதிர்வீட்டுப் பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞன்-டெல்லியில் சம்பவம்

இந்திய தலைநகர் டெல்லியில் தனது எதிர்வீட்டில் வசித்த பெண்ணை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். இதன் பின்னர் அந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி நிலையத்தில் சந்தித்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் இவருக்கும் பேசி பழகி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொலைக்கான அடிப்படையான காரணங்கள் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

40 வயதான ரேணு என்ற தென்மேற்கு டெல்லியின் டப்ரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தள்ளார். ரேணுவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீட்டுக்கு அருகில் ஆஷிஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர், உடற்பயிற்சி நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

இதன் மூலம் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இருவருக்கும் இடையில் எப்படியான உறவு இருந்தது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை ரேணுவின் வீட்டுக்குச் சென்ற ஆஷிஷ், ரேணுவை துப்பாக்கியால் சுட்டு விட்டுஅங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை கவனித்த குடும்பத்தினர் ரேணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரேணு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

டெல்லி துப்ரி பொலிஸ் நிலைய எல்லையில் இந்த கொலை நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய ஆஷிஷை கைது செய்ய பொலிஸார் சென்ற போதிலும் அவர் ஏற்கனவே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவரது சடலத்தையும் மீட்டு,அதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டப்ரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts