Home Archive by category

உலகின் பணக்கார யாசகர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாவென தகவல்

உலகின்  பணக்கார யாசகர் ஒருவர் இந்தியாவின் மும்பாய் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பணக்கார யாசகர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை வீதிகளில் யாசகம் பெற்று வந்த பாரத் ஜெயின் என்பவரின் மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாவென தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு மாதமும் 60,000 இந்திய ரூபா முதல் 75,000 இந்திய ரூபா வரை வருமானம் (ஒரு நாளில் ரூ.2,000-2,500) இருக்குமென நம்பப்படுகின்றது.

மும்பையில் சொந்தமாக ரூ. 1.2 கோடி மதிப்பிலானது இரு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் இரண்டு கடைகளும் வைத்துள்ள இவர், வாடகை மூலம் மாதம் ரூ.30,000 சம்பாதியமாக பெறுகின்றார்.

இப்போதும் யாசகத்தை கைவிடாத இவர், தனக்கு யாசகம் செய்வோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts