Home Archive by category

ராஜஸ்தானின் இளம் வீரருக்கு இலங்கை ஜாம்பவான்கள் பாராட்டு

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இலங்கை ஜாம்பவான்கள் சங்ககாரா, லசித் மலிங்கா பாராட்டியுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ஓட்டங்கள் விளாசினார்.

மேலும், 32வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு இது முதல் சதம் ஆகும். அத்துடன் 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.

போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியுற்றாலும், சதம் விளாசிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இதில் 8 ஆறு ஓட்டங்கள் , 16 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.

இலங்கையின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ரோயல்சின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா இளம் வீரர் ஜெய்ஸ்வாலை பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீங்கள் ஒரு நட்சத்திர குழந்தை" என குறிப்பிட்டு வெகுவாக புகழ்ந்துள்ளார்.

அதேபோல் ஜெய்ஸ்வால் குறித்து தலைமை பயிற்சியாளரான குமார் சங்ககாரா கூறுகையில்,
'அவர் மிகவும் திறமையானவர் மட்டுமல்ல, உண்மையில் கடின உழைப்பாளியும் கூட.

அவர் தயாராவதற்கு நிறைய நேரம் செலவிட்டார், அதிக நேரத்தை தனது வலைப்பயிற்சியில் கழித்தார். அழகாக விளையாடிய அவர் இன்னிங்ஸ் முழுவதும் துடுப்பாட்டம் செய்தார்.

அது விதிவிலக்காக இருந்தது. அவர் ஓட்டங்களை குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். 

Related Posts