சபையில் பிரதி சபாநாயகருடன் சாணக்கியன் வாக்குவாதம்
தெற்கினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையில் கேள்விக்கான நேரம் வழங்கப்படுவதாகவும் ஆனால் வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள சாணக்கியன் எம்.பி, பிரதி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டபோது பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்
இவ்வாறான பக்கசார்பாக அரசாங்கம் நடந்து கொள்வதாலேயே இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாகவும் உரத்த தொனியில் சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.
எனினும் இறுதிவரை சாணக்கியன் முழுமையாக கருத்து தெரிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.