பிரபல எழுத்தாளர் குப்பிழான் சண்முகலிங்கம் காலமானார்
குப்பிழான் ஐ.சண்முகன் என்ற புனைபெயரால் அனைவராலும் அறியப்பட்ட குப்பிழான் மண்ணின் தனிப் பெரும் அடையாளமாகவும், சிறுகதை உள்ளிட்ட பல்துறை ஆளுமையாளராகவும், அனுபவப் பெட்டகமாகவும் திகழ்ந்த பிரபல எழுத்தாளர் ஐ.சண்முகலிங்கம் (குப்பிழான் ஐ.சண்முகன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை(24.03.203) அதிகாலை-04 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காலமானார்.