கோட்டா போட்ட உத்தரவுக்கு தடை போட்ட ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கிய “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும் காலங்களில் அங்கு இருக்காது என நகர அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
இனிவரும் காலங்களில் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர கூறியுள்ளார்.