கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி; எண்மர் காயம்

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.30 மணியளவில் மோதுண்டு விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த கோர விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது