Home Archive by category

பிரான்ஸ் வாழ் இலங்கையர்களே அவதானம்...! வெளியான அறிவிப்பு

பிரான்ஸின் 61 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் அச்சுறுத்தும் ஒவ்வாமை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பருவகால மகரந்த ஒவ்வாமை இவ்வருடமும் பிரான்சை பீடித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்து்ளளனர்.

அதற்கமைய, தற்போது  இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் இந்த மகரந்த ஒவ்வாமை பரவியுள்ளதாக சுகதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் இந்த மாகாணங்கள் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரான்ஸின் 90 சதவீத நிலப்பரப்பு இந்த ஒவ்வாமைக்குள் சிக்கியுள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு ஒவ்வாமை தொடர்பான சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts