Home Archive by category

யாழ். வீரர் வியாஸ்காந்தை பாராட்டிய சங்கக்கார

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் திறமையான விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டியுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) யெப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய வியாஸ்காந்த், ராஜஸ்தான் ராயல்ஸின் வலைப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார உள்ளார்.

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வியாஸ்காந்த் விலகுவதாக அறிவித்த சங்கக்காரா, அந்த இளம் கிரிக்கெட் வீரர் சிறப்பாக பந்துவீசியதாகவும், சிறந்தவற்றில் இருந்து கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

வியாஸ்காந்த் விரைவில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என நம்புவதாகவும் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

Related Posts