Home Archive by category

இனிதே நிறைவுபெற்ற மடு அன்னை ஆலய ஆவணி பெருவிழா

மன்னார் மருதமடு அன்னை ஆலய ஆவணி மாத திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித்பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
 

Related Posts