இன்று முதல் அதிகரிக்கும் மின் விநியோகத் தடை காலம்
நாட்டில் மின்விநியோகத் தடை அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று திங்கட்கிழமை முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.
இதன்காரணமாகவே இவ்வாறு மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.