Home Archive by category

" அன்று குட்டிமணி சொன்னது இன்று உண்மையாகிவிட்டது "; யாழில் வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அன்று குட்டிமணி, தங்கத்துரை தெரிவித்த கருத்து இன்று நிதர்சனமாகியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்தார்.

யாழ்.ரிம்மர் மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற பொது சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் பங்குபற்றுபவர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

குட்டிமணி பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாத தடைச் சட்டம் என்றோ ஒருநாள் தெற்கு மக்களையும் பாதிக்கும் என்றார்.இப்போது அதை உணரக்கூடியதாக உள்ளது எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம்.

ஆனால் ரணில்-ராஜபக்சவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் எனத் தெரிவித்து பெயரை மட்டும் மாற்றி மீண்டும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு கைது செய்வதற்கோ பிணை வழங்குவதற்கோ அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

குறித்த சட்டம் மிகவும் ஆபத்தானது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts