நாணய நிதியத்தின் உதவி இலங்கையை மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைக்கும்
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி சாதகமான சமிக்ஞை அல்ல எனவும், மாறாக நாடு மீளமுடியாத கடனுக்கும் சிக்கியுள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றறிய கஜேந்திரன், நாட்டில் இதுவரை எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொண்டமை தொடர்பில் அரச தரப்பினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ஆனால் எதிர்க் கட்சியினர் தெரிவித்ததுபோன்று இந்த உதவி பொருத்தமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின்போது மாற்றத்தை ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், உண்மையான மாற்ற இதுவரை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையே நாட்டில் இனவாத சிந்தனைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது என்றும் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.