Home Archive by category

ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் பிடியாணை

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது போன்ற பல போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, புட்டினுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ள நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த பிடியாணை உத்தரவுகள் அர்த்தமற்றவை என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts