பிரித்தானிய பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கும் மைத்திரி
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன் பிரித்தானிய யுவதிக்கும் பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.