நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம் இல்லை என்பது அலட்சியமான பதில் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உரை நிகழ்த்தும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''சபாநாயகர் அவர்களே இதே போல் உங்களுடைய மாவட்ட பிரதேச சபைகளில் கணக்காய்வாளர் இல்லை என்றால் அதை சாதாரணமாக கருதுவீர்களா?
உங்கள் கட்சியினுடைய நாமல் ராஜபக்ச அம்பாறை வருகைதந்தபோது ஒரே இரவில் இதற்கான தீர்வை வழங்குவோம் என்று கூறினார்.
பிள்ளையான் வியாழேந்திரன் ஆகிய உங்கள் கட்சியின் சக ராஜாங்க அமைச்சர்கள் கூறினார்கள், இது இடம்பெறாவிட்டால் கிழக்கு மாகாண நிர்வாகத்தை முடக்குவோம் என்று.
கருணா அம்மான் என்ற பெயரில் உங்கள் கட்சியில் போட்டியிட்டவர் கூட இதற்கான தீர்வை வழங்குவோம் என்றார். ஆனால் தற்போது எவருடைய சத்தமும் கேட்கவில்லை.'' என தெரிவித்தார்.