Home Archive by category

திங்கள் முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் வரும் திங்கள் (15) முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி செயலாளர்களுடன் இன்று (13) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சிரமங்கள் உள்ள பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர்களுக்கான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யுமாறு மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மாத்திரம் நடாத்துமாறும், பாடசாலைக்குப் பின்னர் சுற்றுவட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Related Posts