காலிமுகத்திடல் போராளி ரட்டாவின் வங்கிக்கு வந்த 50 லட்சம் ரூபாய்
காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னிலையில் இருந்த ரட்டா என்ற யூடியூபரின் கணக்கிற்கு அநாமதேயமாக 50 லட்சம் ரூபாய் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை ரட்டா தமது பேஸ்புக் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தாம் அந்த பணத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
அவ்வாறு பணத்தைச் செலுத்தி அதனை தாம் ஏற்றுக் கொண்டால் அதனை வைத்து போராட்டத்தின் மீது குற்றம் சுமத்த சிலர் முயற்சிப்பதாகவும் ரட்டா கூறியுள்ளார்.