Home Archive by category

தொடரை வென்றது நியூஸிலாந்து!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, தொடரை வென்றுள்ளது.

ஜமைக்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளேன் பிலிப்ஸ் 76 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபெக் மெக்கொய் 3 விக்கெட்டுகளையும் ரொமாறியோ செப்பர்ட் மற்றும் ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 216 என்ற வெற்றி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒபெட் மெக்கோய் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் ரொவ்மன் பவல் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் மற்றும் பிரெஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நியூஸிலாந்தின் க்ளேன் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts