இந்தியாவை புறக்கணித்து சீனா செல்லும் ரணில்
இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றதும் அயல் நாடான இந்தியாவுக்கு செல்வது வழமையாக இருந்து வந்துள்ள நிலையில்,ரணில் விக்ரமசிங்க தமது முதல் விஜயமாக சீனா செல்லவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-சீனா-இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது கொள்கை ரீதியான அமைதியின்மை நிலவுகிறது.
குறிப்பாக சீனாவின் வேவு கப்பல் தொடர்பான பிரச்சினை பெரிதுபட்டுள்ள நிலையில் இந்தியாவை புறக்கணித்து, ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு செல்வதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.