திலீபனின் நினைவுத்தூபியில் கறுப்பு யூலை நினைவேந்தல்
கறுப்பு யூலை நினைவேந்தலானது இன்றையதினம் தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட இன்னுயிர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி ஆத்மார்த்தமான ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.