இலங்கை நிலைமையை சீராக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டன.
முக்கியமாக இலங்கையை மறுபடியும் முன்பை போல் கொண்டுவருவதற்கான வேலைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.
அதேநேரம் இலங்கையில் கருத்துச் சுதந்திரம், மாற்று அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்தல் போன்ற விடயங்களையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.