Home Archive by category

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts