ஈழத்தின் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் கலைஞர் காலமானார்!
ஈழத்தின் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் (நகைச்சுவை ) கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்) காலமானார்.
அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக்கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவாணர் சின்னமணியுடன் இணைந்து விஜயநாதன் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நாடகம் வில்லிசையென சுமார் 1000இற்கும் அதிகமான அரங்குகளில் மேடையறியமை குறிப்பிடத்தக்கது.