Home Archive by category

18 ஆயிரம் பேர் முப்படைகளிலிருந்தும் பதவி விலக விருப்பம்

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின்போது 18,202 பேர் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

இராணுவத்தில் 16,174 பேரும், கடற்படையில் 1,061 பேரும், விமானப்படை 967 பேரும் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் இராணுவத்தின் 32 அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்

Related Posts