ஒட்டுக்குழு காலாச்சாரம் மட்டக்களப்பில் தலை தூக்குகின்றதா?
மீண்டும் மீண்டும் ஒட்டுக்குழு காலாச்சாரம் மட்டக்களப்பில் தலை தூக்குகின்றதா? என்னும் சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
எனது மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு சோலாரில் வேலை செய்யும் மின்குமிழ் அடங்கிய தொகுதியும் களவாடப்பட்டு உள்ளது.
பாராளுமன்றத்தில் எமது மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கும் மற்றும் ஊழல் மோசடிகள் பற்றி வெளிப்படுத்துகையில் தக்க பதலளிக்க முடியாமல் ஆதாரங்களை நிராகரிக்க முடியாமல் இவ்வாறான ஒட்டுக்குழுக்களின் அராஜரகம், மிரட்டல்கள் மற்றும் கொள்ளைகள் மட்டக்களப்பில் தலை தூக்குகின்றதா?
இவ் அலுவலகமானது நான் பாராளுமன்றத்துக்கு சென்றதில் இருந்து மட்டக்களப்பு தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் கேட்டறிந்து மற்றும் அவர்களுக்கிடையிலான கூட்டங்களை நடாத்தி மிகவும் வினைத்திறனாக செயலாற்றி வந்த இவ் அலுவலகமானது இவ்வாறனதொரு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.