Home Archive by category

கூட்டமைப்பின் அடுத்த தலைமை யார்; செல்வத்தின் அறிவிப்பு வெளியானது

தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகிக்கொள்ள வேண்டும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அடுத்த தலைமை என்று பார்க்கின்றபோது அது கூட்டுத் தலைமை அதாவது சுழற்சி முறையிலான தலைமையாகத்தான் இருக்கும். எம்.ஏ. சுமந்திரனைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் புதிதாக வந்தவர். எங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சுழற்றி முறையிலே இருக்க வேண்டும்.

தற்போது சம்பந்தன் தலைவராக இருக்கும்போது அடுத்த தலைமை சம்பந்தமாக நாங்கள் இன்னமும் அவருடன் பேசவில்லை. ஆகவே, சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத் தலைமையாக - சுழற்றி முறை தலைமையாகத்தான் இருக்கும். இதிலே தனிமனித தலைமையை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

Related Posts