Home Archive by category

அதிகார பகிர்வை பெற்றுக்கொடுக்கும் பேச்சுக்கான திகதியை அறிவித்தார் ஜனாதிபதி

அதிகார பகிர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதிக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தான் தயார் எனவும், ஏனைய கட்சிகளின் கருத்துக்களையும் அவர் இதன்போது கேட்டறிந்துக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம், ரணில் விக்ரமசிங்க இது தொடர்பிலான கருத்துக்களை கேட்டறிந்துக்கொண்டார்.

இதன்படி, அனைவரும் இணக்கம் தெரிவித்த நிலையில், டிசம்பர் மாதம் 11ம் திகதிக்கு பின்னர் பேச்சுவார்த்தைகளை நடத்த அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அதிகார பகிர்வு தொடர்பில் 11ம் திகதிக்கு பின்னர் தான் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சபையில் அறிவித்தார்.

Related Posts