Home Archive by category

ubdate-இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் ஜாவா தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று முற்பகல் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தினால் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை அடுத்து, சுமார் 13,000 பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிலநடுக்கத்தினால் சுமார் 2200திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Related Posts