Home Archive by category

பிரித்தானியாவிலிருந்து ரணிலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய அமைச்சர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான உரிமைகள் குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக அமைச்சர் தரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts