Home Archive by category

மாவீரர்களுக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தனது உரையை ஆரம்பிக்கும் போது " இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகிறது,அவர்களுக்கு முதலில் அஞ்சலியை இதயபூர்வமாக செய்து கொண்டு எனது உரையை தொடர்கின்றேன் என்றார்".

அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்:
 
எமது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் ,அடுத்த தசாப்தத்தில் இன்னுமொரு சாணக்கியன்,சுமந்திரன்,சம்பந்தன்,சிறீதரன் போன்ற பலர் வருவார்கள்.இது மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.சர்வதேசத்தை திருப்திப் படுத்த வார்த்தைகளை விடாமல் ,எமக்கான தீர்வை அடுத்து வரும் சுதந்திர தினத்துக்குள் தாருங்கள்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமை இல்லை ,அக்கறை இல்லை போன்ற விடயங்களை நீங்கள் பார்க்கத் தேவையில்லை.நாட்டை ஆட்சி செய்த கோட்டாபாய அண்ணன் தம்பிகளே ஒற்றுமை இல்லாமல் நாட்டை நாசமாக்கிவிட்டார்கள்.ஆகவே நாம் கருத்து வேறுபாட்டை கொண்டிருந்தாலும் ,தமிழ் மக்களுக்காக ஒன்றாக நின்றே செயற்படுவோம்.எங்களால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்

Related Posts