Home Archive by category

பொலிஸாரை அடித்துத் துவைத்த பெண்கள்

அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் போது பெண்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
விஜயபுர, கடபாஹா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதி பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்த காவல்துறை அதிகாரிகளை தாக்கினர்.

Related Posts