Home Archive by category

பாராளுமன்றம் வருகிறது போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரம்

காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “கோட்ட கோ கம” போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றியமை  தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ந​டைபெறவுள்ளது.

நாளை மறுதினம் 27ஆம் திகதி இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விவாதத்துக்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு, இன்றைய தினம் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

Related Posts