வடக்கு செல்லும் ரணில்
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18ஆம் திகதி வடக்குக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் செல்வார் என்று தெரிகின்றது.
அவர் அங்கு ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குகொள்வார் என்றும், நிலைமைகளை ஆராய்வார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.