ஏரியில் விழுந்த விமானம்... 49 பயணிகள் கதி என்ன?
தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.
இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
விமானத்தில் இருக்கும் பயணிகள் எண்ணிக்கை குறித்து இன்னும் முழுமையான விவரம் தெரியவில்லை. விமானத்தில் 49 பேர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.