அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 இல் வருகிறது
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) 19ஆம் திகதி சபைத் தலைவர் சுசில் பிரேம ஜயந்தவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.