டி20 உலக கோப்பையில் அதிரடி- மேற்கிந்திய தீவை பந்தாடிய ஸ்கொட்லாந்து
டி20 உலகக் கோப்பை முதல் சுற்றின் 3-வது ‘லீக்’ ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான மேற்கிந்திய தீவு அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் மோதியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டம் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் ஜோர்ஜ் முன்சே 66 ஓட்டம் விளாசினார். இதையடுத்து 161 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவு அணி களமிறங்கியது. மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 20 ஓட்டம் , இவின் லீவிஸ் 14 ஓட்டம் அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்தனர்.
சிம்பாப்வே இதையடுத்து தலைவர் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்கொட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி மேற்கிந்திய தீவு அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர். பூரன் 4 , புரூக்ஸ் 4 , பவல் 5 , அகைல் ஹோசன் 1 , அல்ஜாரி ஜோசப் 0 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 79 ஓட்டம் பெற்று 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்கொட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மேற்கிந்திய தீவு அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ஓட்டம் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான மேற்கிந்திய தீவு அணி ஸ்கொட்லாந்து அணியிடம் வீழந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது