கொழும்பில் கதறி அழும் உறவுகள்
வடக்கு- கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும்,சர்வேதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டதின் போது ,பிள்ளைகள்,கணவன் உள்ளிட்ட பலரை இழந்து நிற்கும் உறவுகள் ,நடு வீதியில் கதறி அழும் காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.