Home Archive by category

மஹிந்தவிற்கு எதிராக வெடித்த மற்றுமொரு போராட்டம்! பலர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று (16.10.2022) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் நாவலப்பிட்டி சமகி ஜன பலவேகய அமைப்பாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல மு‍டிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.

இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையிலே இன்று நாவலப்பிட்டி நகரில் கூட்டம் இடம்பெற்றபோதே இவ் எதிர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts