மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மஹிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் நாவலப்பிட்டி நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கு தவிர்ந்த தீவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.