Home Archive by category

ராஜபக்சக்களின் பணத்தை தேடி அலையும் ரணில்

ராஜ பக்சாக்கள் பதுக்கிய பணத்தை,ரணில் விக்கிரமசிங்க தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபா வருமானம் பெறும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கொள்கை அவசியம் என்று கூறியுள்ளார்.இது நல்ல விடயம் தான்.

ஆனால் இப்போது ஒரு லட்சம் ரூபாய் என்பது பெரிய வருமானம் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.ஆகவே 5 லட்சம் ரூபா வருமானம் பெறுபவர்கள்,வரி செலுத்தினால் போதும் என்ற முறையை ஜனாதிபதி கொண்டு வர வேண்டும்.

அத்துடன் ராஜ பக்சாக்களின் பணங்கள் எல்லாம் எங்கே எங்கே இருக்கின்றதோ,அதை எல்லாம் ரணில் தேடித் பிடிக்க வேண்டும்.உகாண்டா,டுபாய் என்று தேடிப் பார்க்க வேண்டு.ஏனென்றால் அந்தளவு கடன் நாட்டுக்கு உள்ளது.உள்நாட்டு கடன் வெளிநாட்டுக் கடன் என பல பில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது.

ஆகவே இந்தப் பணங்களை தேடிப் பிடித்து கடன்களை அடைத்து ,ரணில் மக்களை காப்பாற்ற வேண்டும்.ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். ஏனென்றால் அவரின் பின்னல் இருந்து இயக்கிக் கொண்டு இருப்பவர்கள் ராஜபக்சாக்கள் என்றார்.

Related Posts