Home Archive by category

இலங்கையில் அதிகரிக்கும் விபச்சார தொழில்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிரந்தர வருமானத்தை பெறும் ஒரே வழி விபச்சார தொழில் எனவும், அந்த தொழிலுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை செலவும் உயர்வடைந்துள்ளமையினால், விபச்சார தொழில் மற்றும் அறைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, விபச்சார தொழிலை ஊக்குவித்து பிரசாரம் செய்யும் வகையில், இணையத்தளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் அதிகளவில் வரையறுக்கப்பட்டிருந்த இந்த தொழில், தற்போது ஏனைய பிரதேசங்களிலும் வியாபித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts