பிரதமருடன் முதல் வாராந்திர சந்திப்பை நடத்திய மன்னர் சார்ல்ஸ்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பின்னர் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் முதல் வாராந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஒன்பதாம் திகதி மன்னரின் தயா் ராணி எலிசபெத் உயிரிழந்த மறுநாள், பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரதமரை சந்தித்த பின்னர், இன்று மாலை மூன்றாவது முறையாக மன்னர் அதிகாரப்பூர்வமாக சந்தித்துள்ளார்.
எவ்வாறாயினும், ராணியின் மரணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையிலான முதலாவது வாராந்திர சந்திப்பு இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.