Home Archive by category

யாழ்.-சென்னை விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

Related Posts