Home Archive by category

சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கும் ஐ.நா தீர்மானம்

சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்தத் தீர்மானம் சிறிலங்காவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இது சரியான திசையில் வரவேற்கக் கூடியதாகும் என்றும், ஆனாலும் இன்னும் அதிகமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து எழுவது உட்பட, பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு நிபுணர் பொறிமுறையை நிறுவுவதற்கான சிவில் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அந்த சபை பதிலளிக்கத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts