Home Archive by category

இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயார்- ஐரோப்பிய ஆணைக்குழு

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக் கத்தை உருவாக்கத் தேவையான மறு சீரமைப்புகளை ஏற்படுத்தவும் , தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்று ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் எர்சூலா வொன்டேயர் லைன் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ளதாவதுஇலங்கை மக்கள் எதிர்பாராத சவால்க ளைச் சந்தித்துள்ளனர் . இந்த நெருக் கடியிலிருந்து மீள , இலங்கை இந்தக் காலக்கட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் . நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் , நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது .

சட்டத்தின் ஆட்சி , கருத்துச்சுதந்திரம் , ஒன்று கூடும் உரிமை , அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துதல் , அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பன இந்தச் செயன் முறையின் மிக முக்கியமான அம்சங்களாகும் . இலங்கையின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெகுவிரைவில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும் .

இலங்கையரின் குறு கிய மற்றும் நீண்டகால நலன்களை உறுதிசெய்யும் வகையில் , நிலையான கொள்கைகளை அறிமுகம் செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் .

எதிர்பாராத பொருளாதார நெருக்கடியி லிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் , கடன் வழங் குநர்களுடனும் நடத்தப்படும் பேச்சு வெற்றியளிக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன் என்றுள்ளது .

Related Posts