ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (06)விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு அண்மையில் கூடிய போது 22 ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
அத்துடன், கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கான புதிய தலைவரும் இன்று(06) தெரிவு செய்யப்படவுள்ளார்.