காலிமுகத்திடலில் அமைதி வழியில் தீப்பந்த போராட்டம்
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட இடம் எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதியில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.